"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்
"அத்தம" தேசிய தூய்மை திட்டத்திற்கான பங்குதாரர்களின் திட்டமிடல் கூட்டம்"அத்தம" தூய்மையான இலங்கை தேசிய திட்டமானது இம்மாதம் எட்டாம் தேதி அன்று (08.08.2026) அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை சமூகத்திற்குள் வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டமிடல் கூட்டமானது இன்று பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் விடையதிற்கு பொறுப்பான அனைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்திற்கு Commendation Award கிடைக்கப்பெற்றது.
இவ் விருதினை எமது அலுவலகம் சார்பாக எமது பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்கள் பெற்றுக்கொண்டதுடன் அதற்காக பாடுபட்ட எமது அலுவலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர்களான K. குணநாதன், M.H.M. கனி முன்னாள் உதவி பிரதேச செயலாளர் V. துலாஞ்சனன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் S. முரளிதரன், முன்னாள் கணக்காளர் திரு மோகனகுமார், தற்போதைய கணக்காளர் S. மைதிலி, அனைத்து வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், அலுவலக உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணியாளர்கள், சாரதிகள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார். (27.10.2022)
Media Unit
DS - Verugal

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களின் தலைமையில் Berendina நிறுவனத்தின் அனுசரணையுடன் கடற்தொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. (18.10.2022)
Media Unit
DS - Verugal

தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு பிரதேச செயலாளர் M.A. அனஸ் அவர்களால் நடாத்தப்பட்டது. (19.10.2022)
Media Unit
DS - Verugal

வெருகல் கிராம சேவகர் பிரிவை சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளரான திருமதி சுகந்தி அவர்களின் தோட்டத்தினை மேற்பார்வையிட்டபொழுது. (18.10.2022)
Media Unit
DS - Verugal
Page 1 of 2
















